ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று ...இதமாகக் கையைப் பிடித்து “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன்: கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்..??????

இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே

செம்ம பார்ட்டி........

Saturday, May 10, 2014
Posted by Unknown

ஒரு வீட்ல ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணீருந்தாங்க.,

எதிர்பாராத விதமா 500பேருக்கு மேல அந்தபார்ட்டிக்கு

வந்துட்டாங்க.,அங்க200 பேருக்குதான் சாப்பாடு இருக்கு.,

என்ன பண்ணுரதுனு தெரியல,அந்த வீட்ல இருந்த

பெரியவர் இந்த ப்ரச்சனைய நான் தீர்த்து வைக்கிறேன்னு...

சொல்லி.,எல்லாருக்கும் நடுவுல நின்னு பொண்ணு

வீட்டுக்காரங்க எல்லாரும் எந்திரிங்க னு சொன்னார்.,

200பேர் எந்திரிச்சாங்க,திரும்ப அந்த பெரியவர் இப்போ

மாப்பிள வீட்டுக்காரங்க எல்லாம் எந்திரிங்கனு சொன்னார்.,

அப்பவும் 200பேர் எந்திரிச்சாங்க,இப்போ நீங்க எல்லாரும்

இங்க இருந்து போகலாம்.,எந்திரிக்காதவங்க மட்டும்

சாப்பிட போகலாம்.,ஏன்னா இது கல்யாண பார்ட்டி இல்ல.,

என் பேத்தியோட பர்த்டே பார்ட்டி னு சொன்னார்....





உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே
Image and video hosting by TinyPic
அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது….

பேருந்துக்குள் கொணர்ந்து
மாலைமுரசு விற்பார்கள்.

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
அமர இடம் கிடைக்கும்.

மிதிவண்டி வைத்திருந்தோம்.
நான் பஞ்சர் ஒட்டப் பழகியிருந்தேன்.

எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தார்.
கலைஞரின் அறிக்கைகளைத் தேடிப் படித்தார்கள்.

எல்லா வீடுகளிலும்
முதல் மரியாதை பாடல் ஒலித்தது.

வானொலி நாடகங்களை
ரசித்துக் கேட்டோம்.

சாவி இதயம் பேசுகிறது
பத்திரிகைகள் வந்தன.

எல்லாருமே
அரசுப் பள்ளிகளில் படித்தோம்.

சாலையில்
எப்போதாவது ஒரு வண்டி போகும்.

மழை
நின்று நிதானமாகப் பொழியும்.

சாராயக் கடைகள் இருந்தன
இன்றைய கூட்டம் அக்கடைகளில் இருந்ததேயில்லை.

தமிழாசிரியர்கள்
தந்நிகரற்று விளங்கினார்கள்.

வேலைக்குப் போகாதவன்
எந்தக் குடும்பத்திற்கும் பாரமாயில்லை.

எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.

வெஸ்ட் இண்டீசை வெல்லவே முடியாது.

சந்தைக்குப் போக பத்து ரூபாய் போதும்.
முடிவெட்ட இரண்டு ரூபாய்தான்.

யுவதிகள் பாவாடை தாவணி உடுத்தினர்.
சிலிண்டர் மூடுதுணிபோல்
யாரும் நைட்டி அணியவில்லை.

ராமராஜனைக்கூட விரும்பி ரசித்தோம்.

சுவாசிக்கக் காற்று இருந்தது
குடி தண்ணீரை விலைக்கு வாங்கவில்லை.

தெருவில் சிறுமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள்.
நாங்கள் அவர்களை டபாய்த்துக் கொண்டே
நுங்கு வண்டி ஓட்டுவோம்…!

மயில் இறகுகள் குட்டி போட்டன புத்தகத்தில்.
ஐந்து ரூபாய் தொலைத்ததற்கு அடி வாங்கினேன்.

மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே ஆங்கிலம்.
ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்.

கடந்து தொலைந்துப் போனவை-

நாட்கள் மட்டுமல்ல…. நம் சுகங்களும், நம்பிக்கைகளும்தான்!

ஆம்…
அந்தக் காலம் நன்றாக இருந்தது !

Image and video hosting by TinyPic


Image and video hosting by TinyPic 

Image and video hosting by TinyPic



Image and video hosting by TinyPic




உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே

ஐயோ ராமா........!

Thursday, January 2, 2014
Posted by Unknown


ஒரு இண்டர்வியூ-வின் போது.....

மேலாளர் : நான் சொல்றதுக்கு எதிர்வார்த்தைய சொல்லுங்க...!

பையன்: ஓகே சார்... சொல்லுங்க. நான் ட்ரை பண்றேன்...!

மேலாளர்: நல்லது,

பையன்: கெட்டது,

மேலாளர்: வாங்க சார்,

பையன்: போங்க சார்,

மேலாளர்: அழகு,

பையன்: ஆபத்து,

மேலாளர்: நீங்க தப்பா சொல்றிங்க,

பையன்: நான் சரியா சொல்றேன்,

மேலாளர்: பேச்ச நிறுத்து,

பையன்: தொடர்ந்து பேசு,

மேலாளர்: இப்போ வாய மூடுரியா இல்லையா...?

பையன்: இப்போ பேசுறியா இல்லையா...?

மேலாளர்: நிறுத்துடா எல்லாத்தையும்,

பையன்: தொடங்குடா எல்லாத்தையும்,

மேலாளர்: போடா வெளிய,

பையன்: வாடா உள்ள,

மேலாளர்: ஐயோ கடவுளே..

பையன்: ஆஹா பிசாசே...

மேலாளர் : யு ஆர் ரிஜக்டட்...!

பையன் : ஐ ஆம் செலக்டட்...!
 

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே

தொழிலதிபர் ஒருவர் ரோபோ ஒன்றை வீட்டில் வாங்கி வைத்திருந்தார். அந்த ரோபோ யாரவது பொய் சொன்னால் கன்னத்தில் பளார் என்று அறைந்து விடும்..

ஒரு முறை தொழிலதிபர் மகன் இரவு நேரத்தில் வீட்டுக்கு லேட்டாக வந்தான்..

தொழிலதிபர்: ஏன்டா லேட்டு ?? எங்கட போயிருந்த
மகன்: அப்பா நண்பர்களோட சேர்ந்து பரீட்சைக்கு படிக்க போயிருந்தேன்

ரோபோ மகனின் கன்னத்தில் நச்சுன்னு ஒரு அறை விட்டது ...

கோவம் அடைத்த தொழிலதிபர் மகனிடம்: ஒழுங்கா உண்மையை சொல்லிடு இல்ல ரோபோ கிட்ட மறுபடியும் அடி வாங்குவ

மகன்: மன்னிச்சிடுங்க அப்பா .. நண்பர்களோட சினிமா பார்க்க போயிருந்தேன்

தொழிலதிபர்: டேய் நீ எல்லாம் உருப்படவே மாட்ட.. நானெல்லாம் உன் வயசுல எப்படி படிப்பேன் தெரியுமா ????

ரோபோ தொழிலதிபரின் கன்னத்தில் ஒரு அறை விட்டது ...

இதை பார்த்து லேசான புன்னகையுடன் வந்த தொழிலதிபரின் மனைவி: என்ன இருந்தாலும் உங்களுக்கு பிறந்த பையன் உங்களை மாதிரி தானே இருப்பான்..

இப்போது ரோபோ தொழிலதிபரின் மனைவியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டது.

இந்தியன் பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.

”நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் பீர் குடிப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா?” என்று அறிவித்தார்.

யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.

”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார்.

அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, ”ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்டார்.

”பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வேறொரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்” என்றார் அவர்.




உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே
அழகிய படங்கள் உங்களுக்காக
















உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே
 



















உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே

ஹலோ யார் பேசுரது.....?

Saturday, November 9, 2013
Posted by Unknown
ஒருத்தன் கஸ்ட்டமர் கேர்
நம்பருக்கு போனை போட்டான்..ஒரு பொண்ணு தான்
போனை எடுத்திச்சு ..
.
.
"ஹலோ..!! வணக்கம் !! என்ன விஷயம் சொல்லுங்க
சார்...மே ஐ ஹெல்ப் யூ !!
.
"நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ?
.
"வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல
வேண்டியதில்லையே ..! எதுக்கு போன்
எடுதிங்க்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..!"
.
"கோவ படாதிங்க மேடம்...! கல்யாணம்
ஆய்டிச்சா ?"
.
"இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?"
.
"இல்லை..!! நான் உங்களை கல்யாணம்
பண்ணிக்கலாமா?.."
.
".சாரி..! எனக்கு விருப்பம் இல்லை ..! "
.
"நான் ஒரு ஆப்பர் தரேன் ..என்ன லவ் மேரேஜ்
பண்ணா...ஹனிமூனு
க்கு சுட்சர்லாந்து போலாம்...அரேஞ்ச
ுடு மேரேஜ் ன்னா பாரிஸ் போலாம்!!
.
"சார்..!! நன் தன
இஷ்ட்டமில்லை ன்னு சொல்லிட்டேன்ல ..என்ன
ஏன் தொந்தரவு பண்ணுறீங்க..?
.
இப்ப புரிதா !!.. நான் இஷ்ட்டம்
இல்லன்னா கூட அந்த ஆப்பர் இருக்கு இந்த
ஆப்பர்
இருக்கு ன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!..
அப்ப இப்பிடித்தான் மத்தவங்களுக்கும்
இருக்கும்..!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே
நைட்டு ஒரு 12 மணி இருக்கும் .........

என்சோக கதைய கேளு தாய்குலமே ...... ஆமா தாய்குலமே .........
(அட நம்ம ரிங் டோனுங்க, ஊர்ல இருந்து நம்ம பிரண்டுதான் )

"ஹலோ சொல்றா மாப்ள எப்படி இருக்க ?"

"நல்லா இருக்கண்டா ..... "

"அப்புறம் என்னடா இந்த நேரத்துல ?"

"அது ஒன்னும் இல்லைமாமா இங்க இன்னைக்கு ஒரு பார்ட்டி அதான் மப்பும் , மந்தாரமுமா இருக்கேன் "

"ரைட்டு என்ஜாய் பன்னு, அப்புறம் சொல்லு என்ன விஷயம்.?"

"இரு ஒரு தம்மை பத்த வச்சுக்கிர்றேன்.....................இம் ... நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை மாமா "

"அதான் தெரியுமே , என்ன விஷயம் சொல்லு ?"

"இன்னைக்கு மதுரைக்கு போயிட்டு வந்தேன் , வழியில ஒரு இடத்துல ஆபத்தான வளைவுன்னு போர்டு போட்டு இருந்தானுக "

"சரி அதுக்கு என்ன ?"

"என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்கு போர்டு வக்கணும்? "

(அடப்பாவிகளா .....நைட்டு 12 மனுக்கு போன் பண்ணி கேக்க வேண்டிய டவுட்டாட இது .... அவ்வ்வ்வ்வ்வ்வ்............. இன்னைக்கு இவன் போதைக்கு நாமதான் ஊறுகா போல )

"டேய் மாப்பள உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு போயி தூங்கு "

"அது இல்ல மாமா , இன்னொரு இடத்துல விபத்துப் பகுதின்னு போர்டு போட்டு இருந்தானுக "

"சரி ......"

"அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே அப்புறம் அங்க போயி ஏன் ரோடு போடணும்? "

"டேய் மாப்ள .... , ஏற்கனவே என் பொண்டாட்டிகிட்ட படுகேவலமா திட்டு வாங்கிட்டு வேகாலத்துல இருக்கேன் என்னைய தேவை இல்லாம இப்ப ஒரு ஆஃப் அடிக்க வச்சிடாத, மரியாதையா ஃபோன வச்சிட்டு படு "

"ஹி.ஹி.ஹி...........தங்கச்சிகிட்ட திட்டு வாங்கினியா ....சரி ,,சரி படு ....குட் நைட், ஜூஜூ .......... "

கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் போன் அடிச்சது ........... அதே நாய் தான் ......டென்சனா போன ஆன் பண்ணி

"என்னடா மாப்ள ?"

"சாரி மாமா கோவிச்சுக்காத ............ தம்மடிக்கனும் தீப்பட்டியகாணோம் ... நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?"

"டேய் ............நீ கொயமுத்துர்ல இருக்க , நான் இங்க சிவகாசில இருக்கண்டா "

"இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டேன் "








உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே
இப்படிதான் விவாகரத்து நடக்குதோ ?

படிச்சுப் பாருங்க கண்டிப்பா சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க.

கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.
அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.
“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”
“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”
“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”
“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”
“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”
“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”
“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”
“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”
“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”
“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”
இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.
“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.
“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”







உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே






















உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே





















உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே
உங்கள் பிளாக்கரில் ஷோஷியல் ஷேர்  விட்ஜெட் ஐ எவ்வாறு உருவாக்குவது என பார்ப்போம் நண்பர்களே......



Step:1

முதலில்  உங்கள் பிளாக் கணக்கில் நுழைந்து  Dashboard >Design > Add a gadget > Choose html/javascript. செல்லுங்கள்.

Step:2

 பின்பு கீழேஉள்ள கோடிங்கை கீழே உள்ளதை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.





<ul class="spicesocialwidget">
    <li class="facebook">
    <a rel="nofollow" href="http://www.facebook.com/" target="_blank" title="facebook">
    </a></li>
    <li class="googleplus">
    <a rel="nofollow" href="https://plus.google.com/" target="_blank" title="googleplus">
    </a></li>
    <li class="pinterest">
    <a rel="nofollow" href="http://pinterest.com/" target="_blank" title="pinterest">
    </a></li>
    <li class="twitter">
    <a rel="nofollow" href="http://twitter.com/" target="_blank" title="twitter">
    </a></li>
    <li class="rss">
    <a rel="nofollow" href="http://feedburner.com/" target="_blank" title="rss">
    </a></li>
    <li class="skype">
    <a rel="nofollow" href="http://www.skype.com/" target="_blank" title="Skype">
    </a></li>
    <li class="vimeo">
    <a rel="nofollow" href="http://www.vimeo.com/" target="_blank" title="vimeo">
    </a></li>
    <li class="dribbble">
    <a rel="nofollow" href="http://www.dribbble.com/" target="_blank" title="dribble">
    </a></li>
    <li class="flickr">
    <a rel="nofollow" href="http://www.flickr.com/" target="_blank" title="flickr">
    </a></li>
    <li class="linkedin">
    <a rel="nofollow" href="http://www.linkedin.com/" target="_blank" title="linkedin">
    </a></li>
    <li class="youtube">
    <a rel="nofollow" href="http://www.youtube.com/" target="_blank" title="youtube">
    </a></li>
    </ul>
    <style>
    ul.spicesocialwidget {float:right;}
    ul.spicesocialwidget li {float:left;list-style: none outside none;border:none;}
    ul.spicesocialwidget li a{background-color:transparent;background-image:url('https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHDQBQL0u8wV0hO-9PYhfH8kkKRhADM2kQyr7hNPMtd0brJBemn5Uw3B_XzBT33DOnCiGIOTd6o2Pg4taHMUxDKwty7XkA-V_KIz7FcNMWDQzlJKvUGebguB-97SkXzXylvHrmlOzE0152/s1600/spice-social-gadget-sprite.png');background-repeat:no-repeat;background-size:auto 96px;border:0 none;color:white;direction:ltr;display:block; height:32px;overflow:hidden;text-align:left;text-decoration:none;text-indent:-999em;transition:all 0.2s ease 0s;width:32px}
    .ie7 ul.spicesocialwidget li a, .ie8 ul.spicesocialwidget li a{background-image:url('https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHDQBQL0u8wV0hO-9PYhfH8kkKRhADM2kQyr7hNPMtd0brJBemn5Uw3B_XzBT33DOnCiGIOTd6o2Pg4taHMUxDKwty7XkA-V_KIz7FcNMWDQzlJKvUGebguB-97SkXzXylvHrmlOzE0152/s1600/spice-social-gadget-sprite.png' )}
    ul.spicesocialwidget li.facebook a{ background-position:0 0}
    ul.spicesocialwidget li.flickr a{ background-position:-32px 0}
    ul.spicesocialwidget li.dribbble a{ background-position:-64px 0}
    ul.spicesocialwidget li.googleplus a{ background-position:-96px 0}
    ul.spicesocialwidget li.linkedin a{ background-position:-128px 0}
    ul.spicesocialwidget li.pinterest a{ background-position:-160px 0}
    ul.spicesocialwidget li.rss a{ background-position:-192px 0}
    ul.spicesocialwidget li.skype a{ background-position:-224px 0}
    ul.spicesocialwidget li.twitter a{ background-position:-256px 0}
    ul.spicesocialwidget li.vimeo a{ background-position:-288px 0}
    ul.spicesocialwidget li.youtube a{ background-position:-320px 0}
    ul.spicesocialwidget li.facebook a:hover, #sidebar ul.spicesocialwidget li.facebook a:hover{ background-position:0 -32px}
    ul.spicesocialwidget li.flickr a:hover, #sidebar ul.spicesocialwidget li.flickr a:hover{ background-position:-32px -32px}
    ul.spicesocialwidget li.dribbble a:hover, #sidebar ul.spicesocialwidget li.dribbble a:hover{ background-position:-64px -32px}
    ul.spicesocialwidget li.googleplus a:hover, #sidebar ul.spicesocialwidget li.googleplus a:hover{ background-position:-96px -32px}
    ul.spicesocialwidget li.linkedin a:hover, #sidebar ul.spicesocialwidget li.linkedin a:hover{ background-position:-128px -32px}
    ul.spicesocialwidget li.pinterest a:hover, #sidebar ul.spicesocialwidget li.pinterest a:hover{ background-position:-160px -32px}
    ul.spicesocialwidget li.rss a:hover, #sidebar ul.spicesocialwidget li.rss a:hover{ background-position:-192px -32px}
    ul.spicesocialwidget li.skype a:hover, #sidebar ul.spicesocialwidget li.skype a:hover{ background-position:-224px -32px}
    ul.spicesocialwidget li.twitter a:hover, #sidebar ul.spicesocialwidget li.twitter a:hover{ background-position:-256px -32px}
    ul.spicesocialwidget li.vimeo a:hover, #sidebar ul.spicesocialwidget li.vimeo a:hover{ background-position:-288px -32px}
    ul.spicesocialwidget li.youtube a:hover, #sidebar ul.spicesocialwidget li.youtube a:hover{ background-position:-320px -32px}
    </style>



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே

இதுவும் அழகு....[facebook]

Thursday, October 24, 2013
Posted by Unknown























உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே

சிந்தனைகள்....[Facebook]

Wednesday, October 23, 2013
Posted by Unknown














 







உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே

























உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே

















உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே
Welcome to My Blog

Subscribe via email

Recommended Post Slide Out For Blogger
Powered by Blogger.

Business

Flickr Widget

Comments

Random Posts

Facebook

Popular Posts

- Copyright © Greencity -RK computers- Powered by Blogger - edit by Rajkumar -