Archive for May 2014
ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று ...இதமாகக் கையைப் பிடித்து “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.
கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?
மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)
கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?
மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?
கணவன்: கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்..??????
இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...!
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே
ஒரு வீட்ல ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணீருந்தாங்க.,
எதிர்பாராத விதமா 500பேருக்கு மேல அந்தபார்ட்டிக்கு
வந்துட்டாங்க.,அங்க200 பேருக்குதான் சாப்பாடு இருக்கு.,
என்ன பண்ணுரதுனு தெரியல,அந்த வீட்ல இருந்த
பெரியவர் இந்த ப்ரச்சனைய நான் தீர்த்து வைக்கிறேன்னு...
சொல்லி.,எல்லாருக்கும் நடுவுல நின்னு பொண்ணு
வீட்டுக்காரங்க எல்லாரும் எந்திரிங்க னு சொன்னார்.,
200பேர் எந்திரிச்சாங்க,திரும்ப அந்த பெரியவர் இப்போ
மாப்பிள வீட்டுக்காரங்க எல்லாம் எந்திரிங்கனு சொன்னார்.,
அப்பவும் 200பேர் எந்திரிச்சாங்க,இப்போ நீங்க எல்லாரும்
இங்க இருந்து போகலாம்.,எந்திரிக்காதவங்க மட்டும்
சாப்பிட போகலாம்.,ஏன்னா இது கல்யாண பார்ட்டி இல்ல.,
என் பேத்தியோட பர்த்டே பார்ட்டி னு சொன்னார்....
எதிர்பாராத விதமா 500பேருக்கு மேல அந்தபார்ட்டிக்கு
வந்துட்டாங்க.,அங்க200 பேருக்குதான் சாப்பாடு இருக்கு.,
என்ன பண்ணுரதுனு தெரியல,அந்த வீட்ல இருந்த
பெரியவர் இந்த ப்ரச்சனைய நான் தீர்த்து வைக்கிறேன்னு...
சொல்லி.,எல்லாருக்கும் நடுவுல நின்னு பொண்ணு
வீட்டுக்காரங்க எல்லாரும் எந்திரிங்க னு சொன்னார்.,
200பேர் எந்திரிச்சாங்க,திரும்ப அந்த பெரியவர் இப்போ
மாப்பிள வீட்டுக்காரங்க எல்லாம் எந்திரிங்கனு சொன்னார்.,
அப்பவும் 200பேர் எந்திரிச்சாங்க,இப்போ நீங்க எல்லாரும்
இங்க இருந்து போகலாம்.,எந்திரிக்காதவங்க மட்டும்
சாப்பிட போகலாம்.,ஏன்னா இது கல்யாண பார்ட்டி இல்ல.,
என் பேத்தியோட பர்த்டே பார்ட்டி னு சொன்னார்....
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே