Posted by : Unknown Friday, December 20, 2013


தொழிலதிபர் ஒருவர் ரோபோ ஒன்றை வீட்டில் வாங்கி வைத்திருந்தார். அந்த ரோபோ யாரவது பொய் சொன்னால் கன்னத்தில் பளார் என்று அறைந்து விடும்..

ஒரு முறை தொழிலதிபர் மகன் இரவு நேரத்தில் வீட்டுக்கு லேட்டாக வந்தான்..

தொழிலதிபர்: ஏன்டா லேட்டு ?? எங்கட போயிருந்த
மகன்: அப்பா நண்பர்களோட சேர்ந்து பரீட்சைக்கு படிக்க போயிருந்தேன்

ரோபோ மகனின் கன்னத்தில் நச்சுன்னு ஒரு அறை விட்டது ...

கோவம் அடைத்த தொழிலதிபர் மகனிடம்: ஒழுங்கா உண்மையை சொல்லிடு இல்ல ரோபோ கிட்ட மறுபடியும் அடி வாங்குவ

மகன்: மன்னிச்சிடுங்க அப்பா .. நண்பர்களோட சினிமா பார்க்க போயிருந்தேன்

தொழிலதிபர்: டேய் நீ எல்லாம் உருப்படவே மாட்ட.. நானெல்லாம் உன் வயசுல எப்படி படிப்பேன் தெரியுமா ????

ரோபோ தொழிலதிபரின் கன்னத்தில் ஒரு அறை விட்டது ...

இதை பார்த்து லேசான புன்னகையுடன் வந்த தொழிலதிபரின் மனைவி: என்ன இருந்தாலும் உங்களுக்கு பிறந்த பையன் உங்களை மாதிரி தானே இருப்பான்..

இப்போது ரோபோ தொழிலதிபரின் மனைவியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டது.

More than a Blog Aggregator

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

Subscribe via email

Recommended Post Slide Out For Blogger
Powered by Blogger.

Business

Flickr Widget

Comments

Random Posts

Facebook

Popular Posts

- Copyright © Greencity -RK computers- Powered by Blogger - edit by Rajkumar -