Showing posts with label Facebook different. Show all posts

Image and video hosting by TinyPic
அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது….

பேருந்துக்குள் கொணர்ந்து
மாலைமுரசு விற்பார்கள்.

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
அமர இடம் கிடைக்கும்.

மிதிவண்டி வைத்திருந்தோம்.
நான் பஞ்சர் ஒட்டப் பழகியிருந்தேன்.

எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தார்.
கலைஞரின் அறிக்கைகளைத் தேடிப் படித்தார்கள்.

எல்லா வீடுகளிலும்
முதல் மரியாதை பாடல் ஒலித்தது.

வானொலி நாடகங்களை
ரசித்துக் கேட்டோம்.

சாவி இதயம் பேசுகிறது
பத்திரிகைகள் வந்தன.

எல்லாருமே
அரசுப் பள்ளிகளில் படித்தோம்.

சாலையில்
எப்போதாவது ஒரு வண்டி போகும்.

மழை
நின்று நிதானமாகப் பொழியும்.

சாராயக் கடைகள் இருந்தன
இன்றைய கூட்டம் அக்கடைகளில் இருந்ததேயில்லை.

தமிழாசிரியர்கள்
தந்நிகரற்று விளங்கினார்கள்.

வேலைக்குப் போகாதவன்
எந்தக் குடும்பத்திற்கும் பாரமாயில்லை.

எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.

வெஸ்ட் இண்டீசை வெல்லவே முடியாது.

சந்தைக்குப் போக பத்து ரூபாய் போதும்.
முடிவெட்ட இரண்டு ரூபாய்தான்.

யுவதிகள் பாவாடை தாவணி உடுத்தினர்.
சிலிண்டர் மூடுதுணிபோல்
யாரும் நைட்டி அணியவில்லை.

ராமராஜனைக்கூட விரும்பி ரசித்தோம்.

சுவாசிக்கக் காற்று இருந்தது
குடி தண்ணீரை விலைக்கு வாங்கவில்லை.

தெருவில் சிறுமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள்.
நாங்கள் அவர்களை டபாய்த்துக் கொண்டே
நுங்கு வண்டி ஓட்டுவோம்…!

மயில் இறகுகள் குட்டி போட்டன புத்தகத்தில்.
ஐந்து ரூபாய் தொலைத்ததற்கு அடி வாங்கினேன்.

மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே ஆங்கிலம்.
ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்.

கடந்து தொலைந்துப் போனவை-

நாட்கள் மட்டுமல்ல…. நம் சுகங்களும், நம்பிக்கைகளும்தான்!

ஆம்…
அந்தக் காலம் நன்றாக இருந்தது !

அழகிய படங்கள்(facebook)

Sunday, November 17, 2013
Posted by Unknown
அழகிய படங்கள் உங்களுக்காக
















உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே





















உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே
Welcome to My Blog

Subscribe via email

Recommended Post Slide Out For Blogger
Powered by Blogger.

Business

Flickr Widget

Comments

Random Posts

Facebook

Popular Posts

- Copyright © Greencity -RK computers- Powered by Blogger - edit by Rajkumar -